Saturday, December 7, 2013

திண்ணை


நாடோடிகள் இரவில் நலமாய் தூங்கவும்...
நாய்கள் தம் சேய்களை ஈனிப்பேணவும்....
நண்பர்கள் நாலு பேர் வந்தமர்ந்து,
நாட்டைப் பற்றிக் கவலை கோரவும்....
வீட்டுத்தலைவி மாதம் மூன்று நாள்,
விடுப்பெடுத்து மீண்டும் கல்லாங்காய் ஆடவும்..
ஜூனியர் சிங்கர்களுக்கு சீனியர் சிங்கர்கள்,
சுதியும் லயமும் சுரமும் கூறவும்...
நம் முனோர்கள் வீட்டின்முன் கட்டிவைத்தார்
திண்ணை!
நாமிதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த இடம்
சென்னை!

-    பாபாசரண் 

No comments:

Post a Comment