Sunday, August 26, 2012

கலைந்த கனவு



பல்லவி 

காரணம்  இன்றி கலையும் கனவுபோல்
காதலும் ஒருநாள் கலைந்தது!
நான் கண்களுக்குள்ளே தீட்டிய ஓவியம்
கண்ணீர் மழையில் அழிந்தது!
கண்கள் மூடி காத்திருந்தால்
கனவுகள் மீண்டும் தொடர்வதில்லை!
கைகள் தவறிய காதலும் அதுபோல்
கனவிலும் மீண்டும் வருவதில்லை!                       (காரணம் )

சரணம் 

காதலன் இல்லை  என்பதனால்
காதல் இல்லை என்றாகிடுமா?
உன் கைகள் வரைந்த கடிதங்களென்ன
கரையான் தின்னும் காகிதமா?
உச்சியில் நீ இட்ட முத்தமொன்று
உதிராப் பருவாய் உறுத்திடுதே!
நான் உனக்காய் உதட்டில் தேக்கிய முத்தம்
உலராமல் இன்னும் ஊறிடுதே!                                (காரணம் )

சரணம் 

காதல் இல்லா இரவுகளை - என்னால்
கற்பனை  செய்யவும் முடியவில்லை!
காலையில் உன்முகம் பார்க்க இல்லையெனில்
கண்களைத் திறந்தும் பயனில்லை!
கடைசியாய் உன் கண்களைக் கண்ட நிமிடம்
காலம் முழுவதும் மறக்காது!
என் கற்பும் ஒருநாள் களவு போகலாம்
காதல் மட்டும் இறக்காது!

No comments:

Post a Comment