பல்லவி
காரணம் இன்றி கலையும் கனவுபோல்
காதலும் ஒருநாள் கலைந்தது!
நான் கண்களுக்குள்ளே தீட்டிய ஓவியம்
கண்ணீர் மழையில் அழிந்தது!
கண்கள் மூடி காத்திருந்தால்
கனவுகள் மீண்டும் தொடர்வதில்லை!
கைகள் தவறிய காதலும் அதுபோல்
கனவிலும் மீண்டும் வருவதில்லை! (காரணம் )
சரணம்
காதலன் இல்லை என்பதனால்
காதல் இல்லை என்றாகிடுமா?
உன் கைகள் வரைந்த கடிதங்களென்ன
கரையான் தின்னும் காகிதமா?
உச்சியில் நீ இட்ட முத்தமொன்று
உதிராப் பருவாய் உறுத்திடுதே!
நான் உனக்காய் உதட்டில் தேக்கிய முத்தம்
உலராமல் இன்னும் ஊறிடுதே! (காரணம் )
சரணம்
காதல் இல்லா இரவுகளை - என்னால்
கற்பனை செய்யவும் முடியவில்லை!
காலையில் உன்முகம் பார்க்க இல்லையெனில்
கண்களைத் திறந்தும் பயனில்லை!
கடைசியாய் உன் கண்களைக் கண்ட நிமிடம்
காலம் முழுவதும் மறக்காது!
என் கற்பும் ஒருநாள் களவு போகலாம்
காதல் மட்டும் இறக்காது!
No comments:
Post a Comment