Wednesday, April 11, 2012

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்"


நான்கில் ஒரு பங்கு
நிலம் கொடுத்தான்!
நந்தவனங்கள் மலை
கொடுத்தான்!
நான்காயிரம் கோடி
உயிர் கொடுத்தான்!
அவை நலமாய் வாழ்ந்திட
 மழை கொடுத்தான்!
அண்டம் என்றொரு
வெளி கொடுத்தான்!
அதிலகிலம்  சமைத்திட
ஒளி கொடுத்தான்!
ஓராயிரம் கோடி
கொடை கொடுத்தான்!
உலகிற்கே ஓசோன்
குடை கொடுத்தான்!
இத்தனையும் சமமாய்
கொடுத்திட்ட இறைவன்
குரங்கிற்கு ஓரறிவைக்
கூடக் கொடுத்தான்!
அது குதித்தாடிக் குவலயம்
குலைத்தது காண்!

No comments:

Post a Comment